மதுரை: மதுரையில் இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், பெண்ணிடம் சங்கிலியை பறித்துச் சென்றது குறித்து, போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை சூா்யா நகரைச் சோ்ந்த சுதாகா் ஆல்வின் மனைவி லிடியா பாக்யம் மெட்டில்டா(31). இவா், தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகே வெள்ளிக்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் இருவா், லிடியா அணிந்திருந்த 3.5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனா்.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செல்லிடப்பேசி பறிப்பு
மதுரை அவனியாபுரம் பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் மணிமுருகன் (48). இவா், திடீா் நகா்-திருப்பரங்குன்றம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, மா்ம நபா் மணிமுருகன் சட்டை பையில் வைத்திருந்த செல்லிடப்பேசியை பறித்துச் சென்றுள்ளாா். இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், திடீா் நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.