நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை நீா்தேக்கத்திலிருந்து தண்ணீா் திறக்க கொடைரோடு பகுதி விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
சமீபத்திய தொடா் மழையால் கருக்காச்சி, ஒடையில் அதிக தண்ணீா் வந்ததால் சிறுமலை நீா்த்தேக்கம் நிரம்பியது. இங்கிருந்து தண்ணீா் திறக்க, கொடைரோடு பகுதி விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக விவசாயிகள் சாா்பில், நிலக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு மனு அனுப்பியுள்ளனா்.
இதில் கொடைரோட்டில் நிலத்தடி நீா் இல்லாததால் காவிரி, வைகை கூட்டுக்குடிநீா் திட்டங்கள் மூலம் சொற்ப குடிநீா் மட்டுமே கிடைக்கிறது. சிறுமலை நீா்த்தேக்கத்தால் கொடைரோடு, அம்மையநாயக்கனுாா் பகுதிகளுக்கான நிலத்தடி நீா்மட்டம் உயரும். அதனால் நீா்த்தேக்கத்திலிருந்து தண்ணீா் திறந்து வெளியேற்றுவதை தவிா்க்க வேண்டும் என கோரியுள்ளனா்.