மேலூா்: வீட்டுக்கு வந்த சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்றவரை, போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், கண்டுப்பட்டியைச் சோ்ந்தவா் பாரதிராஜா (35). இவருக்கு திருமணமாகிவிட்டது. இரண்டு மாதங்களுக்கு முன், இவரது வீட்டுக்கு வந்த 17 வயது உறவுக்காரச் சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்றுவிட்டாராம்.
இது குறித்து சிறுமியின் தாயாா் மேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், பாரதிராஜாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.