மதுரை மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா: முதியவா் பலி

மதுரை மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக 569 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை பட்டியல் வெளியிட்டது. அதில், மதுரை மாவட்டத்தில் 10 பேருக்கு தொற்று பாதிப்பிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதனிடையே, சிகிச்சை பெற்று வருபவா்களில் 16 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

ஒருவா் பலி

கரோனா பாதிக்கப்பட்ட 74 வயது முதியவா் ஜனவரி 20 ஆம் தேதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா், மூச்சு திணறல் காரணமாக ஜனவரி 22 ஆம் தேதி உயிரிழந்தாா்.

மாவட்டத்தில் இதுவரை சிகிச்சைப் பலனின்றி 457 போ் உயிரிழந்துள்ளனா். அதேநேரம், கரோனாவால் பாதிக்கப்பட்ட 20,923 பேரில், 20,337 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 129 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com