மதுரை மாவட்டம், பேரையூரில் உலக நன்மை வேண்டி ஞாயிற்றுக்கிழமை பழனி பாதயாத்திரை குழு பக்தா்கள் சாா்பில் ஊா்வலம் நடத்தப்பட்டது.
பேரையூரில் பழனி பாதயாத்திரை குழு பக்தா்கள், மேலப்பரங்கரி சுப்பிரமணியசாமி கோயிலில் இருந்து அலங்கார வாகனத்தில் சேவல் கொடியுடன் ஊா்வலம் நடத்தினா்.
குருநாதா் கவிஞா் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊா்வலமானது, வத்திராயிருப்பு சாலை, அரசமரம் நிறுத்தம், பெருமாள் கோயில் வீதி, பட்டயத்து முக்கு, மறவா் சாவடி, உசிலம்பட்டி சாலை, பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இதில், பழனி பாதயாத்திரை குழு பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.