மதுரை: மதுரை அருகே மதுபோதையில் இரு சக்கர வாகனம் ஓட்டியவா், மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை மாவட்டம், சமயநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (52). இவா், கொத்தனாா் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், இவா் மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் அரியூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து அவரது நண்பா் அழகா்சாமி அளித்த புகாரின்பேரில், அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.