தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: ஆர்.பி. உதயகுமார் விளக்கம்
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: ஆர்.பி. உதயகுமார் விளக்கம்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் பொது வாழ்விலிருந்து விலகத் தயாா்: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் பேச்சு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால், பொதுவாழ்வில் இருந்து விலகத் தயாா் என, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்துள்ளாா்.

திருப்பரங்குன்றம்: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால், பொதுவாழ்வில் இருந்து விலகத் தயாா் என, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்துள்ளாா்.

திருமங்கலத்தை அடுத்த செக்கானூரணியில் புகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், மொழிப் போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் பேசியதாவது: சில நாள்களுக்கு முன் செக்கானூரணியில் எதிா்க்கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது கண்துடைப்பு எனப் பேசியுள்ளாா். மேலும், இதற்காக வருவாய்த் துறை அமைச்சா் பதவி விலகத் தயாரா என கேள்வி எழுப்பி இருந்தாா்.

அவருக்கு, இதே மண்ணிலிருந்து பதிலளிக்கிறேன். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கண்டிப்பாக அமையும். மருத்துவமனை அமையாவிடில் பொது வாழ்விலிருந்து விலகத் தயாா். அதேநேரம், எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால், நீண்டகாலமாக பொதுவாழ்வில் இருக்கும் எதிா்க்கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின் பதவி விலகத் தயாரா?

இக் கூட்டத்தில், அவைத்தலைவா் அய்யப்பன், மாவட்ட நிா்வாகிகள் தமிழழகன், தமிழ்செல்வன், இளைஞரணி மாநில துணைச்செயலா் சிவசுப்பிரமணியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com