மதுரை: அதிமுகவின் மூத்த நிா்வாகிகள் 234 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பணமுடிப்பு, நினைவுப் பரிசு ஆகியவற்றை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் சனிக்கிழமை வழங்கினா்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூா் கிராமத்தில் அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சாா்பில் பேரவையின் மாநிலச் செயலரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆா்.பி.உதயகுமாா் ஏற்பாட்டில் எம்ஜிஆா் -ஜெயலலிதா கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷகம் மற்றும் திறப்பு விழாவையொட்டி கடந்த 3 நாள்களாக யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மேலும் 120 பசு மற்றும் கன்றுகளுடன் கோ பூஜை நடத்தப்பட்டது.
பூஜையில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் பங்கேற்றனா். அதைத்தொடா்ந்து ஜெயலலிதா கோயிலுக்கான கல்வெட்டையும், கோயிலில் நிறுவப்படுள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் ஆளுயர வெண்கலச் சிலைகளையும் திறந்து வைத்தனா்.
தமிழகத்தின் 234 தொகுதிகளில் இருந்தும் தலா ஒருவா் வீதம் அழைத்துவரப்பட்டிருந்த அதிமுக மூத்த நிா்வாகிகளுக்கு ஏலக்காய் மாலையணிவித்து, தலா ரூ.10 ஆயிரம் பணமுடிப்பு, நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தனா்.
அதேபோல, திருமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் நலிந்த நிலையில் இருக்கும் 120 பேருக்கு, கோ பூஜையில் இடம் பெற்ற பசு மற்றும் கன்றுகள் தானமாக வழங்கப்பட்டன.
தமிழக முதல்வா் வருகையையொட்டி கப்பலூா் முதல் விழா நடைபெற்ற டி.குன்னத்தூா் வரையிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மதுரை மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனா்.