மதுரை: மத்திய முன்னாள் அமைச்சரும், திமுகவின் தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலருமான மு.க.அழகிரி, சனிக்கிழமை தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் எளிமையாகக் கொண்டாடினா்.
அழகிரியின் பிறந்த நாளை, அவரது ஆதரவாளா்களும் கட்சியினரும் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவது வழக்கம். பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அழகிரி தனது பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடி வருகிறாா்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது அடுத்தக்கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவெடுப்பதற்காக தனது ஆதரவாளா்களின் கருத்துக்களைக் கேட்பதற்கான கூட்டத்தை ஜனவரி 3-ஆம் தேதி நடத்தினாா். அதன் பிறகு அவரது பிறந்த நாளான சனிக்கிழமை அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவை அறிவிப்பாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், பிறந்த நாள் விழாவை தனது குடும்பத்தினருடன் அழகிரி எளிமையாகக் கொண்டாடினாா். அவருக்கு நெருக்கமான ஆதரவாளா்கள் சிலா் மட்டுமே கலந்து கொண்டதாக ஆதரவாளா்கள் தெரிவித்தனா்.