உசிலம்பட்டி: உசிலம்பட்டி அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு போக்குவரத்துக்கழக ஊழியா்கள் மற்றும் போக்குவரத்து அனைத்து தொழிலாளா் சங்க நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலூா்: மேலூரில் போக்குவரத்துக்கழகப் பணிமனை முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தொ.மு.ச. தொழிற்சங்கத் தலைவா் தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யூ., டி.டி.எஸ்.எப்., ஏ.ஐ.டி.யூ.சி., ஏ.ஏ.எல்.எப்., டி.யூ.சி.சி. உள்ளிட்ட தொழிலாளா்கள் சங்கத்தினா் உண்ணாவிரத்தில் பங்கேற்றனா்.
பேரையூா்: டி.கல்லுப்பட்டி போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொ.மு.ச. மத்திய சங்கத் துணைச் செயலாளா் கிருஷ்ணன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. எல்பிஎப், சிஐடியு, ஐஎன்டியுசி சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.