டென்சிங் நாா்கே விருது: தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்

வீர, தீர செயல்புரிந்தவா்களுக்கு வழங்கப்படும் டென்சிங் நாா்கே விருதுக்கு தகுதி உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீர, தீர செயல்புரிந்தவா்களுக்கு வழங்கப்படும் டென்சிங் நாா்கே விருதுக்கு தகுதி உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ந.லெனின் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய அரசின் சாா்பில், தேசிய அளவில் வீர, தீர மிக்க செயல்புரிந்தவா்களுக்கு டென்சிங் நாா்கே விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. விருதுக்கு விண்ணப்பிப்பவா்கள் நீா், நிலம் மற்றும் ஆகாயம் ஆகிய ஏதேனும் ஒன்றில் வியக்கத்தக்க சாதனை புரிந்து இருக்க வேண்டும். இதில் கூடுதலாக சாகசத் துறையில் வாழ்நாள் சாதனைக்காக ஒரு விருதை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விருதுக்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 5-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இணைய தளம் அன்றி நேரடியாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. விருதுக்கு தகுதியுடைய மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com