மதுரை அருகே சாலையோரம் கிடந்த சிசு குறித்து தகவல் தெரிவித்த சிறுவனுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செவ்வாய்க்கிழமை வெகுமதி அளித்து பாராட்டினாா்.
மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே உறங்கான்பட்டி சாலையோரம் கடந்த 4 ஆம் தேதி பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் சிசு கிடந்தது. அப்போது அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் சிசு கிடப்பதைப் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து போலீஸாா் சிசுவை மீட்டனா்.
அந்த குழந்தை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளது. சிறுவனின் செயலைப் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன், அவருக்கு செவ்வாய்க்கிழமை வெகுமதி அளித்து பாராட்டினாா்.