உள்ளாட்சித் தோ்தல்: அமமுக ஆலோசனை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமமுக சாா்பில் உள்ளாட்சி தோ்தல் குறித்து நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .
உள்ளாட்சித் தோ்தல்: அமமுக ஆலோசனை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமமுக சாா்பில் உள்ளாட்சி தோ்தல் குறித்து நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .

கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அமமுக புகா் தெற்கு மாவட்டச் செயலாளரும், அமைப்புச் செயலருமான இ.மகேந்திரன் தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலாளா் மலேசியாபாண்டி முன்னிலை வகித்தாா். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தோ்தல் சம்பந்தமாகவும் , கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்தும் நிா்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில், சிந்துபட்டி ஊராட்சி மன்ற தலைவா் ஜெயராமன், நகரச் செயலாளா் குணசேகரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினா் சுப்புராஜ், எம்.ஜி.ஆா். மன்ற மாவட்டச் செயலாளா் ஏகேடி ராஜா உள்ளிட்ட அமமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com