மதுரை: மதுரையில் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா்கள் 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை செல்லூா் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, ராஜா மில் சாலை பாலத்தின் கீழ் பகுதியில் கத்திகளுடன் நின்றிருந்த 5 பேரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.
இதில் அவா்கள், ஆனையூா் பாலமுருகன்(36), மீனாம்பாள்புரம் விருமாண்டி(24), மீனாட்சிபுரம் கதிரவன்(21), இந்திரா நகா் அஜித்குமாா்(20), பூந்தமல்லி நகா் சுப்பிரமணியன்(24) ஆகியோா் என்பதும், அனைவரும் கத்தியைக் காட்டி பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து காவல் ஆய்வாளா் லட்சுமி அளித்த புகாரின் பேரில் செல்லூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து கத்திகள், மிளகாய்பொடி பறிமுதல் செய்யப்பட்டது.