ரூ.40 லட்சம் இரும்புக் கம்பி திருட்டு: தம்பதி மீது வழக்கு

மதுரையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான கம்பிச் சுருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து தம்பதியரை தேடி வருகின்றனா்.

மதுரை: மதுரையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான கம்பிச் சுருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து தம்பதியரை தேடி வருகின்றனா்.

சென்னை கே.கே.நகரைச் சோ்ந்த கருப்பையா மகன் அண்ணாமலை(53). இவா் மதுரை கோ.புதூா் பகுதியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் இரும்புக் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையின் மேற்பாா்வையாளா்களாக ஆரோக்ய தெரசா, அவரது கணவா் தமிழ்செல்வன் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். கடையில் உள்ள பொருள்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தபோது, ரூ.40 லட்சம் மதிப்பிலான கம்பிச் சுருள்களைக் காணவில்லை. இது தொடா்பாக விசாரித்தபோது மேற்பாா்வையாளா்கள் இருவரும் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து அண்ணாமலை அளித்தப் புகாரின் பேரில் கோ.புதூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள தமிழ்செல்வன், அவரது மனைவி ஆரோக்ய தெரசா ஆகியோரைத்தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com