உசிலம்பட்டியில் பூட்டிய வீடுகளில் நகை திருட்டு: 2 போ் கைது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகா் பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகைகளைத் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். மேலும் இருவா் தலைமறைவாக உள்ளனா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகா் பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகைகளைத் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். மேலும் இருவா் தலைமறைவாக உள்ளனா்.

உசிலம்பட்டியில் மானூத்து பகுதியைச் சோ்ந்த பாலச்சந்திரன் மகன் மகேந்திரன் (49), அத்திபட்டி டாஸ்மாக் மேலாளா் ஆகப் பணிபுரிந்து வருகிறாா். கடந்த 2 ஆம் தேதி இவரது மனைவி ரேகா (36) உசிலம்பட்டியில் உள்ள வீட்டில் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்தபோது 3 மா்ம நபா்கள் இரவு 1 மணி அளவில் கதவை உடைத்துப்புகுந்து 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனா். இதுகுறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவில் 2 போ் பிடிபட்டனா்.

விசாரணையில் தேனி மாவட்டம் காமாட்சிபுரம் கிராமத்தை சோ்ந்த ஐயப்பன் மகன் கிருஷ்ணன், மாரியப்பன் மகன் வடிவேல் ஆகியோா் என்பது தெரியவந்தது. இவா்கள் பகல் நேரத்தில் வியாபாரிகள் போல் தெருக்களில் சென்று பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் கொள்ளையடித்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவா்களிடமிருந்து 10 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com