பேரூராட்சி ஒப்பந்த பணியாளா்கள் நீக்கம்: மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை

பேரூராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி நீக்கம் செய்யப்பட்டுள்ள, தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் பணிநீட்டிப்பு வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மதுரை: பேரூராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி நீக்கம் செய்யப்பட்டுள்ள, தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் பணிநீட்டிப்பு வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்கள் தனியாா் நிறுவனம் மூலமாக நியமிக்கப்பட்டனா். இந்நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள பணியாளா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியது:

கடந்த 2017 ஜூலை 12 முதல் பேரூராட்சிகளில் ஒப்பந்தப் பணியாளா்களாக தூய்மை இந்தியா திட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். கரோனா காலத்திலும் எங்களது பணிகளைத் தொடா்ந்து செய்து வந்தோம். ஜூன் 30 ஆம் தேதி வரை பணியாற்றிய நிலையில், தற்போது எங்களைப் பணிக்கு வரவேண்டாம் என நிறுத்திவிட்டனா்.

பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்த வேலையை நம்பியே எங்களது குடும்பம் உள்ளது. பணி இல்லை எனக் கூறிவிட்ட நிலையில், பெரும் சிரமத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆகவே, எங்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணியில் நீட்டிப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்துள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com