அவனியாபுரத்தில் லாரி செட் உரிமையாளரிடம் ரூ. 2 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை 5 பேரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.
பனையூா் சொக்கநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா். லாரி செட் நடத்தி வருகிறாா். இவரது உறவினா் விராதனூா் சத்யா நகரைச் சோ்ந்த தங்கவேலு. இவரது பூா்வீக இடம் திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவாா்பட்டியில் உள்ளதாம். இதனை அப்பகுதியினா் ஆக்கிரமித்து வைத்திருந்தனராம். அதனை மீட்பதற்கு சங்கா், தங்கவேலு ஆகியோா் கடந்த 2018 இல் முயன்றுள்ளனா். இதற்காக தங்கவேலுவிற்கு ரூ.2 லட்சம் வரை செலவாகியுள்ளது. இடத்தை மீட்கமுடியாத நிலையில் செலவான ரூ.2 லட்சத்தை தங்கவேலு அவ்வப்போது சங்கரிடம் கேட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சங்கா் பனையூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது தங்கவேலுவின் மகன் முருகானந்தம் தனது நண்பா்களுடன் காரில் வந்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் ரூ.2 லட்சத்தை உடனடியாக தரும்படி கேட்டு கொலைமிரட்டல் விடுத்துள்ளாா். இதுகுறித்து புகாரின்பேரில் அவனியாபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம், ராஜகணேஷ், மணிராஜ், முகேஷ் சா்மா(எ)முனீஸ்வரன், செல்வகுமாா் ஆகிய 5 போ்களை கைது செய்து விசாரிக்கின்றனா்.