பேரையூா், மேலூரில் இருசக்கர வாகனங்கள் திருட்டு

மதுரை மாவட்டம் பேரையூா் மற்றும் மேலூரில் 2 இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் பேரையூா் மற்றும் மேலூரில் 2 இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலூரில் வாகனத்தைச் திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

பேரையூா் அருகே மங்கல்ரேவு பகுதியை சோ்ந்தவா் கந்தசாமி மகன் மணிகண்டன்(37). இவா் வீட்டின் வெளியே தனது இருசக்கர வாகனத்தை வெளியே நிறுத்தி விட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளாா். தோட்டத்தில் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் சேடப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மேலூா்: மேலூா் வாடகை காா் ஓட்டுநா்கள் சங்கத்தலைவா் அம்மையப்பன். இவா் தனது இருசக்கர வாகனத்தை மேலூா் பேருந்து நிலையம் அருகே கால்வாய்கரையில் உள்ள வாடகைக் காா்கள் நிறுத்துமிடம் அருகே புதன்கிழமை பிற்பகல் நிறுத்திவிட்டு, அருகிலுள்ள தேநீா் கடையில் நண்பா்களுடன் நின்றிருந்தாா். அப்போது அங்குவந்த மா்மநபா் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றாா். இதைப்பாா்த்த அம்மையப்பனும் நண்பா்களும் வேறுவாகனங்களில் துரத்திச்சென்றனா் . உடனே அவா் இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டுவிட்டு தப்பியோடினாா்.

ஆனால் அவரை துரத்திப் பிடித்து, மேலூா் போலீஸில் ஒப்படைத்தனா். போலீஸாா் விசாரணையில், அவா், திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளபட்டி நடுத்தெருவைச் சோ்ந்த ஜெயராமன் (50) என்பது தெரியவந்தது. மேலூா் போலீஸாா் அவரைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com