மதுரை மாவட்டம் அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
வைணவ திருத்தலங்களில் தென் திருப்பதி என போற்றப்படும் அழகர்கோவில் ஆடித் திருவிழா கொடியேற்றம் இன்று காலை 7.15 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் செய்து கோயில் பட்டர்கள் கொடியேற்றத்தை நடத்தி வைத்தனர்.
இந்நிகழ்வின் போது பொதுமக்கள் யாரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அழகர்கோயிலின் ஆடித் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும்.
ஆனால் இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக எளிய முறையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.