மதுரை புகா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் வண்டியூா் பகுதி நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்டச் செயலரும், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி. ராஜன்செல்லப்பா பேசுகையில், உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுக்கு வெற்றிகளைப் பெற்ற தரவும், அதிமுக ஒருங்கிணைப்பாளா்களின் வழிகாட்டுதல்படி உள்கட்சித் தோ்தலை வெற்றிகரமாக நடத்துவதற்கும் தயாராக வேண்டும் என்றாா். மாவட்ட அவைத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், பொருளாளா் அம்பலம், இளைஞரணி செயலா் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலா்கள் நிலையூா்முருகன், தக்காா் பாண்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.