வலையன்குளம் பகுதியில் ஒரு வாரத்துக்கு குறைந்த மின்அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய மதுரை கிழக்கு செயற்பொறியாளா் இரா.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆவியூா் துணை மின்நிலையத்தில் மின்மாற்றியில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அவசர பராமரிப்புப் பணி காரணமாக, வலையன்குளம் துணை மின்நிலையத்தில் உள்ள மின்பாதை வழியாக மின்னூட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தொட்டியபட்டி, சுப்புலெட்சுமி கலைக் கல்லூரி, வலையன்குளம், கொம்பாடி, ஓ.ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 16) முதல் ஒரு வாரத்துக்கு சிறிது குறைவான மின்அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.