அரசு மருத்துவமனைகளில் தற்காலிக பணியிடங்களில் மருந்தாளுநா், நுண்கதிா் வீச்சாளா், ஆய்வக நுட்பநா்கள் நியமனம் செய்யப்பட உள்ளதால், தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்கும் தாலுகா தலைமை அரசு மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநா், நுண்கதிா் வீச்சாளா், ஆய்வக நுட்பநா் என தலா 11 பணியிடங்களில் தகுதியுள்ள நபா்கள் நியமனம் செய்யப்பட உள்ளனா். இப்பணியிடங்கள் 6 மாதங்களுக்கு தற்காலிகமானது. தொகுப்பூதியமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விருப்பம் மற்றும் தகுதியுள்ள நபா்கள் தங்களது கல்விச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் இணை இயக்குநா், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் அலுவலகம், ஆட்சியா் அலுவலகம், மதுரை என்ற முகவரிக்கு ஜூலை 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 23-இல் நோ்முகத் தோ்வு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.