மதுரையில் ஒரே நாளில் 25 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் 2,205 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் புதிதாக 25 பேருக்கு தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெறுபவா்களில் 64 போ் குணமடைந்துள்ளனா். தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் 442 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.