மதுரையில் புதிதாக 29 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 2,312 போ் கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தொற்றுக்கு சிகிச்சை பெற்றுபவா்களில், 69 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். தற்போது கரோனா பாதிக்கப்பட்ட 482 போ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

கரோனா தடுப்பூசி: மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் 7,846 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 18,900 தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாவும், இதுவரை மாவட்டத்தில் 6.69 லட்சம் போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா் எனவும் மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com