முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கத்தின் நலத்திட்ட உதவிகளைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த மதவழி சிறுபான்மையினா்களான இஸ்லாமியா், கிறிஸ்தவா்களின் பொருளாதார வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம், கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. இச்சங்கம் வசூலிக்கும் நன்கொடைத் தொகைக்கு இணையாக அரசின் இணை மானியம் 1:2 என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது.
இச்சங்கங்கள் வாயிலாக, ஏழைப் பெண்கள், ஆதரவற்ற விதவையா், கணவரால் கைவிடப்பட்டோருக்கு சிறுவணிக உதவி, விலையில்லா தையல் இயந்திரம், விலையில்லா கிரைண்டா், மருத்துவ உதவி, கல்வி உதவித் தொகை போன்றவை வழங்கப்படுகின்றன.
நிகழாண்டில் இந்த சங்கத்தில் இந்த நலத்திட்ட உதவிகள் பெற விரும்பும் தகுதியுள்ள சிறுபான்மையின பெண்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், மதத்திற்கான சான்று, வருமானச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம்.
இதுதொடா்பான விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.