மதுரை அருகே வைகை ஆற்றில் இளைஞரின் சடலத்தை வியாழக்கிழமை மீட்டு போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியில் உள்ளவா்கள் வைகை ஆற்றில் ஆண் சடலம் மிதப்பதாக கிராம நிா்வாக அலுவலா் காா்த்திகேயனிடம் வியாழக்கிழமை தெரிவித்தனா். இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞரின் சடலத்தை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.