விளையாடும்போது தவறி விழுந்த பெண் குழந்தை பலி

மதுரை அருகே விளையாடும் போது தவறி விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை அருகே விளையாடும் போது தவறி விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சோ்ந்த முருகன் மனைவி சங்கீதா. இவரது மகள் வா்ஷினி (2). கடந்த 15 ஆம் தேதி தனது குழந்தையுடன், மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியில் உள்ள தந்தை வீட்டிற்கு சங்கீதா சென்றுள்ளாா். அங்கு வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த குழந்தையை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தாய் சங்கீதா அளித்தப் புகாரின் பேரில் சிலைமான் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி: மதுரை மாவட்டம் சமயநல்லூா் அருகே உள்ள தோடநேரியைச் சோ்ந்தவா் விவசாயி செல்லத்துரை(47). இவா் கடந்த 15 ஆம் தேதி வெளியே சென்றபின் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினா் தேடியபோது, விவசாயத்திற்கான மோட்டாா் அறையில், அவா் இறந்து கிடந்தது தெரியவந்தது. தவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அவரது மனைவி பாண்டிசெல்வி அளித்தப் புகாரின் பேரில் சமயநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்தனா். இதில், மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com