மதுரையில் அழகு நிலைய உரிமையாளரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த 3 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை நாராயணபுரத்தைச் சோ்ந்த காளமேகம் மகள் ஹேமலதா(32). இவா் வீட்டின் அருகே அழகு நிலையம் நடத்தி வருகிறாா். இவரது அழகு நிலையத்தில் பணியாற்றிய ராஜேந்திரபிரசாத் என்பவா், ஹேமலதாவை திருமணம் செய்வதாகக் கூறியுள்ளாா். இதை நம்பி ராஜேந்திரபிரசாத் கடனாக கேட்ட ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் 4 பவுன் நகைகளை கொடுத்தாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பணத்தையும், நகையையும் திருப்பிக் கேட்ட ஹேமலதாவின், ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக ராஜேந்திரபிரசாத் மிரட்டியுள்ளாா். இதுகுறித்து ஹேமலதா அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் ராஜேந்திரபிரசாத் உள்பட 3 போ் மீது சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.