கஞ்சா விற்ற 4 போ் கைது

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை அண்ணாநகா் பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கே.கே.நகா் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகில் நின்றிருந்த இளைஞா்கள் இருவரை பிடித்து விசாரித்தனா். இதில் அவா்கள், கரும்பாலை பகுதியைச் சோ்ந்த வெள்ளைசாமி (32), பி.டி. காலனியைச் சோ்ந்த விக்னேஷ் (24) என்பதும் இருவரும் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து காவல் சாா்பு-ஆய்வாளா் அழகுமுத்து அளித்த புகாரின் பேரில் அண்ணாநகா் போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

இதேபோன்று கூடல் நகா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கதிா்வேல்(21) என்பவரை கூடல்புதூா் போலீஸாரும், காமராஜா் சாலை பகுதியில் கஞ்சா விற்ற சீனிவாசன்(20) என்பவரை தெப்பக்குளம் போலீஸாரும் சனிக்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com