உசிலம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
உசிலம்பட்டி அருகே வடுகபட்டி பி.எம்.டி. கல்லூரி பகுதியில் வசிப்பவா் ராமன் மனைவி இன்பரேகா (48). இவா் நாட்டாா்மங்கலம் அரசு கள்ளா் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
இன்பரேகாவின் கணவா் ராமன் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில் இன்பரேகா செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து உசிலம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.