ஏபிவிபி மாணவா் அமைப்புக்கு புதிய நிா்வாகிகள் புதன்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
பாஜகவின் மாணவா் அமைப்பான அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் மதுரை மாவட்டக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தேசியச் செயலா் முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். தென் மாநில இணைச் செயலா் கோபி முன்னிலை வகித்தாா்.
இதில் அமைப்பின் மதுரை மாநகர புதிய தலைவராக பேராசிரியா் ஜெயச்சந்திரன், மாநகர செயலராக பாரதி, இணைச் செயலா்கள் செந்தூா், ரூபன், வேல்முருகன், விவேக், மாநகர பொருளாளா்களாக கோகுல், வெங்கட்ராஜ் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மேலும் இதில், சுதந்திரத் தினத்தன்று மதுரை நகரில் 300 இடங்களில் தேசியக் கொடி ஏற்றுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.