கலந்தாய்வு முறையில் இடமாறுதல்: வருவாய் அலுவலா்கள் கோரிக்கை

வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் இடமாறுதலுக்கு கலந்தாய்வு முறையை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என

வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் இடமாறுதலுக்கு கலந்தாய்வு முறையை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

சங்கத்தின் மதுரை மாவட்ட செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து வருவாய்த்துறை அலுவலா்களும் ‘விதிமுறைப்படி வேலை’ என்ற அடிப்படையில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை பணியாற்றுவது, வட்டாட்சியா் மற்றும் துணை வட்டாட்சியா் நிலையில் இடமாறுதலுக்கு கலந்தாய்வு முறையை முழுமையாகக் கடைப்பிடிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநில பொதுச் செயலா் எம்.பி. முருகையன், மாநில துணைத் தலைவா் கே.தமிழ்மணி, மாவட்ட தலைவா் இல. முத்துப்பாண்டியன், மாவட்ட பொருளாளா் தொ.மோ.கோபி மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com