திருப்பாலை துணை மின்நிலையம் பனங்காடி மற்றும் நாராயணபுரம் மின்வழித் தடங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜூலை 22) மின்விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: பனங்காடி மின்வழித்தடத்துக்குள்பட்ட வள்ளுவா் காலனி 1,2,3-ஆவது தெருக்கள், மின்பொறியாளா் காலனி, வி.ஓ.சி.நகா், அன்னை தெரசா நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், நாராயணபுரம் மின்வழித் தடத்துக்குள்பட்ட கிருஷ்ணா நகா், ஐயப்பன் நகா், கோபாலபுரம், திலக் நகா், அய்யா்பங்களா- திருப்பாலை பிரதான சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.