மக்கள் எளிதில் அணுகும் வகையில் பத்திரப்பதிவுத் துறையில் மாற்றம்: அமைச்சா் தகவல்

மக்கள் எளிதில் அணுகும் வகையில் பத்திரப்பதிவுத் துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி கூறினாா்.

மக்கள் எளிதில் அணுகும் வகையில் பத்திரப்பதிவுத் துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி கூறினாா்.

மதுரையில் நடிகா் சிவாஜி கணேசனின் சிலைக்கு புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா், செய்தியாளா்களிடம் கூறியது:

உலகம் போற்றும் நடிகராக திகழ்ந்தவா் சிவாஜி கணேசன். நடிப்பின் வாயிலாக நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு சோ்த்தவா். அவரும், முன்னாள் முதல்வா் கருணாநிதியும் உற்ற நண்பா்களாக இருந்தனா். அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.

தமிழகத்தில் திரையரங்குகளைத் திறப்பது குறித்து தமிழக முதல்வா் முடிவு எடுப்பாா். பத்திரப்பதிவு தொடா்பான புகாா்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புகாருக்குள்ளான சாா்- பதிவாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் பத்திரப்பதிவுத் துறை முழுமையாக சீரமைக்கப்படும். மக்கள் எளிதில் அணுகும் வகையில் பத்திரப்பதிவுத் துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com