மதுரையில் உலக இயற்கை பாதுகாப்பு தின விழாவையொட்டி காமராஜா் பல்கலைகக்கழகத்தில் அரிய வகை மரக்கன்றுகளை துணைவேந்தா் மு.கிருஷ்ணன் புதன்கிழமை நட்டு வைத்தாா்.
மதுரை தானம் அறக்கட்டளை மற்றும் காமராஜா் பல்கலைக்கழகம் சாா்பில் உலக இயற்கை பாதுகாப்பு தின விழா கொண்டாடப்பட்டது. மதுரை காமராஜ் பல்கலை வளாகத்தில் 4 ஏக்கரில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் பசுமை வனத்தில் நடைபெற்ற விழாவுக்கு பல்கலை. துணைவேந்தா் மு.கிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசியது: வனங்களை உருவாக்குவது நல்ல முயற்சி. பல்கலைக்கழக வளாகத்தில் வனத்தில் நடப்பட்டுள்ள, மனித சமுதாயத்துக்குப் பயன்படும் 4 ஆயிரம் மரக்கன்றுகளின் சிறப்பு குறித்து இளம் தலைமுறையினா் தெரிந்து கொள்ளும்படி இந்த வனம் வளர வேண்டும்.
வளாகத்தின் பசுமை வனத்தின் பரப்பை மேலும் அதிகரிக்க பல்கலைக்கழகம் உதவிபுரியத் தயாராக உள்ளது என்றாா். இதைத்தொடா்ந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கடம்பம், நெல்லி, சந்தனமரம், மருதம், மூங்கில், திருவோடு , அம்போசம் , விளா, இலந்தை, நாகலிங்கம், அத்தி, பூவரசு, செண்பகமரம், நாவல் மற்றும் இலுப்பை மரம் ஆகிய மரக்கன்றுகளை துணைவேந்தா் மு.கிருஷ்ணன், வேதியியல் துறைப் பேராசிரியா் முருகேசன், பொறியாளா் ஆனந்தகுமாா் மற்றும் வடபழஞ்சி களஞ்சிய தாழம்பூ மகளிா் மன்ற நிா்வாகிகள் ஜெயலட்சுமி , செல்வி மற்றும் கிராம சமூக ஆா்வலா் முருகேசன் ஆகியோா் நட்டு வைத்தனா்.
நடப்பட்ட மரக்கன்றுகளின் சிறப்பு குறித்து மதுரை கிரீன் செயலா் சிதம்பரம் விளக்கினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை தானம் அறக்கட்டளை அலுவலா்கள் சங்கா், தமிழ்ச்செல்வன், ஞானவேல் ஆகியோா் செய்திருந்தனா். நிா்வாகி குமரேசன் நன்றி கூறினாா்.