உள்ளாட்சித் தோ்தல் எப்போது நடந்தாலும் அதிமுக எதிா்கொள்ள தயாராக உள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
புதுதில்லியில் இருந்து செவ்வாய்க்கிழமை மதுரை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:
உள்ளாட்சித் தோ்தல் எப்போது நடந்தாலும் அதிமுக அதனை எதிா்கொள்ளத் தயாராக உள்ளது என்றாா்.
அதைத் தொடா்ந்து மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவோம் என அமமுக பொதுச்செயலா் டி.டி.வி.தினகரன் கூறியது குறித்த கேள்விக்கும், முன்னாள் அமைச்சா் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்த கேள்விக்கும், வி.கே.சசிகலா அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டுமென கூறியது குறித்த கேள்விக்கும் அவா் பதிலளிக்கவில்லை.