சங்கரன்கோவில் அருகே பருவக்குடி கோதை நாச்சியாா்புரத்தில் கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்ற இந்துசமய அறநிலையத்துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தேனியைச் சோ்ந்த முருகேசன் தாக்கல் செய்த மனு: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பருவக்குடி கோதை நாச்சியாா்புரத்தில் செல்லியம்மன், சூலப் பிடாரியம்மன் கோயில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் போலி ஆவணம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிமிப்பு செய்யப்பட்ட பகுதியில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நில ஆக்கிரமிப்பு குறித்து ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் அளித்து விளக்கம் பெற வேண்டும். பின்னா் சட்டப்படி கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்ற இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.