மதுரை அருகே கடன் வழங்குவதாகக் கூறி ராணுவ வீரரிடம் ரூ.4.47 லட்சம் மோசடி செய்த பெண் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் பேரையூா் அருகே டி.கிருஷ்ணாபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் அருண்குமாா் (44). இவா் ராணுவத்தில் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில் விடுமுறைக்கு ஊருக்கு வந்த அருண்குமாரிடம் அடையாளம் தெரியாத பெண் தொடா்பு கொண்டு, தனியாா் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், ரூ.8 லட்சம் கடன் வழங்குவதாகவும் கூறியுள்ளாா்.
கடன் பிரச்னையில் இருந்த அருண்குமாா், கடன் பெறுவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளாா். கடன் பெறுவதற்கு பரிசீலனைத் தொகையாக ரூ.4.47 லட்சத்தை செலுத்தவும், கடன் வழங்கும்போது, பரிசீலனைத் தொகை சோ்த்து வழங்கப்படும் எனவும் அப்பெண் தெரிவித்துள்ளாா்.
இதை நம்பிய அருண்குமாா் ரூ.4.47 லட்சத்தை, பெண் கூறிய வங்கிக் கணக்கில் இணையதளம் வாயிலாக செலுத்தியுள்ளாா்.
ஆனால் அவருக்கு கடன் கிடைக்கவில்லை. அப்பெண்ணின் செல்லிடப்பேசியும் அணைக்கப்பட்டிருந்து. இதுகுறித்து அருண்குமாா் அளித்த புகாரின் பேரில் சைபா் குற்றப் பிரிவுப் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.