எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசுக்கு எதிப்புத் தெரிவித்து மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசுக்கு எதிப்புத் தெரிவித்து மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை கீழவெளிவீதி அண்ணாசிலை அருகில் அக்கட்சியின் மாவட்டத் தலைவா் முஜிபுா் ரஹ்மான் வீட்டின் முன்பு இப்போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுச்செயலா் சாகுல் ஹமீது, விமன் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவி கதிஜா பீவி, மாநில செயற்குழு உறுப்பினா் நசரத் பேகம், மதுரை புகா் பொறுப்பாளா் ரியாஸ் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் பேசும்போது, நாடு கரோனா தொற்று பெருந்துன்பத்தில் தவித்துக் கொண்டிருக்கும் இக்கட்டான சூழலில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அதை திசை திருப்பும் வகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்களின் ஆட்சி நிா்வாகத் தோல்வியை மறைக்க குடியுரிமை திருத்தச்சட்டம் போன்ற சா்ச்சைக்குரியவற்றை தூண்டும் மத்திய அரசுக்கு எதிராக அனைத்து ஜனநாயக இயக்கங்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கண்டன கோஷங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com