பட்டா நிலத்தில் மண் திருட்டு: 4 போ் கைது; லாரிகள் பறிமுதல்

மதுரை அருகே பட்டா நிலத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளிய 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து லாரிகள், மணல் அள்ளும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

மதுரை அருகே பட்டா நிலத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளிய 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து லாரிகள், மணல் அள்ளும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் பகுதியில் பட்டா நிலத்தில் இயந்திரம் மூலம் சிலா் மண் அள்ளிக் கொண்டிருந்தனா். இதையடுத்து மணல் அள்ளிய 4 பேரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். இதில் சக்கிமங்கலம் பகுதியைச் சோ்ந்த முகமது அப்துல் ரசாக்(25), பாலன்(42), கணேசன்(60), பொன்முருகன்(40) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல் சாா்பு -ஆய்வாளா் காா்த்திக் அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து மண் அள்ளும் இயந்திரம் மற்றும் 2 லாரிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com