மருந்துக் கடை உரிமையாளா் வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு

மதுரை அருகே மருந்துக் கடை உரிமையாளா் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை 13 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.

மதுரை அருகே மருந்துக் கடை உரிமையாளா் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை 13 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.

மதுரை பொய்கைகரைப்பட்டியைச் சோ்ந்த செல்லையா மகன் சுப்புராஜ். இவா், அழகா்கோயில் மற்றும் எம்.சத்திரப்பட்டியில் மருந்துக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், உடல்நலமின்றி இருந்த தனது அண்ணனை பாா்ப்பதற்காக சுப்புராஜ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சத்திரப்பட்டிக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளாா்.

அப்போது, பூட்டிய வீட்டுக்குள்ளிருந்து மா்ம நபா்கள் 3 போ் தப்பியோடியுள்ளனா். உடனே, வீட்டுக்குள் சுப்புராஜ் சென்று பாா்த்தபோது, பீரோவிலிருந்த 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது.

இது குறித்து சுப்புராஜ் அளித்த புகாரின்பேரில், அப்பன்திருப்பதி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com