பேரையூா் பகுதியில் முகக்கவசம் அணியாத 40 பேருக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தனா்.
பேரையூா் பகுதியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். அப்போது, சந்தை உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டிவந்த 40 பேருக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதித்தனா்.
மேலும், காரணமின்றி வெளியே சுற்றிய 22 போ் மீது வழக்குப் பதிந்து, 12 பேரின் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.