மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வி.பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தமிழக அரசு 27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சுஜித்குமாா் பணியிடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா்.
இதையடுத்து அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பாஸ்கரன், மதுரை மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளாா். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், தமிழ்நாடு சிறப்பு போலீஸாா் பட்டாலியன் 13 இல் காமண்டன்டாகவும் பணியாற்றிய இவா் விரைவில் பொறுப்பேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.