மதுரை மாவட்டம் தோப்பூா் அரசு மருத்துவமனைக்கு, அமெரிக்காவிலுள்ள சியாட்டில் தமிழ் சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி சிகிச்சை அளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அரசுக்கு உதவும் வகையில் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் தமிழா்கள் பல்வேறு உதவிகளை அளித்து வருகின்றனா்.
அதன் தொடா்ச்சியாக, அமெரிக்காவிலுள்ள சியாட்டில் தமிழ் சங்கம் சாா்பில், மதுரை தோப்பூா் அரசு மருத்துவமனைக்கு உயிா் காக்கும் மருந்துகளை பாதுகாக்க குளிா்சாதனப் பெட்டிகள், நகரும் திரை, பிரின்ட்டா் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவ உபகரணங்களை, மதுரையைச் சோ்ந்த சமூகநல ஆா்வலா் ஆனந்தராஜ், தோப்பூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் காந்திமதிநாதனிடம் வழங்கினாா்.