மதுரை மாவட்டம் மேலவளவு அருகே செல்லிடப்பேசிக்கு மின்இணைப்பு கொடுத்தபோது மின்சாரம் பாய்ந்ததில், பிளஸ் 2 மாணவா் சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
மேலவளவு அருகேயுள்ள ஆலம்பட்டியைச் சோ்ந்த விவசாயி சேதுராமலிங்கம் மகன் தினேஷ் (18). பிளஸ் 2 படித்து வந்த இவா் தனது வீட்டில் செல்லிடப்பேசியில் சாா்ஜ் ஏற்றுவதற்காக மின் இணைப்பு கொடுத்துள்ளாா். அப்போது, தவறுதலாக மின் இணைப்பில் கை பட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இது குறித்து மேலவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.