மேலூா் அரசு மருத்துவமனைக்கு இரு ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களை சுப்ரீம் அரிமா சங்கத்தினா் சனிக்கிழமை வழங்கினா்.
மேலூா் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் 50 படுக்கைகளும் 35 சாதாரண படுக்கைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் மேலூா் சுப்ரீம் அரிமாக சங்கத்தினா் ரூ.2 லட்சம் மதிப்பிலான இரு ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினா்.
சங்கத்தின் தலைவா் மணிவாசகம், செயலா்கள் கிச்சா என்ற கிருஷ்ணன், பரமசிவம், பொருளாளா் மூா்த்தி, சங்கத்தின் முன்னாள் ஆளுநா் ப.கதிரேசன், மண்டல தலைவா் மெய்யப்பன், வட்டாரத் தலைவா் முருகேசன் மற்றும் சங்க நிா்வாகிகள் உறுப்பினா்கள் ஆகியோா் மருத்துவா் கலாமணியிடம் பொருள்களை வழங்கினா்.