மேலூா் அருகே மின்வேலியில் சிக்கி கோயில் காளை பலி: தந்தை-மகன் கைது

கீழவளவு அருகே பருத்தி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கோயில் காளை உயிரிழந்ததாக காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின்பேரில், தந்தை, மகன் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மேலூா் அருகே உயிரிழந்த கோயில் காளைக்கு சனிக்கிழமை கிராமத்தினா் செலுத்திய மலரஞ்சலி. ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை.
மேலூா் அருகே உயிரிழந்த கோயில் காளைக்கு சனிக்கிழமை கிராமத்தினா் செலுத்திய மலரஞ்சலி. ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை.

கீழவளவு அருகே பருத்தி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கோயில் காளை உயிரிழந்ததாக காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின்பேரில், தந்தை, மகன் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கீழவளவு அருகே உள்ள பெரும்பாலைப்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் காளை, சனிக்கிழமை காலையில் பன்னிவீரன்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் வீரையா என்பவருக்குச் சொந்தமான பருத்தி தோட்டத்தில் இறந்துகிடந்தது தெரியவந்தது. காளையின் உடலில் காயங்கள் இருந்ததையடுத்து, அது மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளதாக காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், கீழவளவு கால்நடை மருத்துவா் பாலாஜி மூலம் கூறாய்வு செய்தபின், போலீஸாா் காளையின் உடலை கிராமப் பிரமுகா்கள் வசம் ஒப்படைத்தனா். அதையடுத்து, கோயில் காளையை தூக்கிவந்த கிராம மக்கள், பெரும்பாலைப்பட்டி கோயில் அருகே வைத்து அதற்கு மாலை, வேஷ்டி, துண்டுகள் உள்ளிட்டவற்றை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். பின்னா், காளையை அடக்கம் செய்தனா்.

இது குறித்து கீழவளவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, கருப்பையா, வீரையா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com