மதுரை தனியாா் மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றுவந்த போடியைச் சோ்ந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், போடியைச் சோ்ந்தவா் ஜெயா (38). இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கடந்த மே 16 ஆம் தேதி மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு, அவருக்கு மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்றுடன், கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பிருப்பதும் தெரியவந்தது.
அதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கருப்புப் பூஞ்சை பாதிப்பு காரணமாக ஜெயா ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா். இதை, அம்மருத்துவமனை மருத்துவா்கள் உறுதி செய்துள்ளனா்.