மதுரையில் பட்டப்பகலில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்ற இளைஞரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து 78 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
மதுரை பொன்மேனி பிரதான சாலை அம்பேத்கா் சிலை அருகே உள்ள மைதானத்தில், சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அங்கு மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா். அவா், சோலை அழகுபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பிரபு (34) என்பது தெரியவந்தது.
இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபுவை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 78 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.